THIS WEBSITE IS UNDER CONSTRUCTION ....

விளம்பரங்கள்

 

 




மதுரை மீனாட்சியம்மன் கோவில்

 

  

பூஜை நேரங்கள்

அம்மன் சன்னதி - பூஜை நேரங்கள்

  திருவனந்தல காலை 5.30 மணி
  விள பூஜை மற்றும் காலசாந்தி காலை 6.30 - 7.10 மணி
  திருக்குள சாந்தி மற்றும் உச்சிக்கால பூஜ காலை 10.30 - 11.00 மணி
சயரட்சை பூஜை மாலை 4.30 - 5.10 மணி
  அர்த்தஜாம பூஜை மாலை 7.30 - 8.10 மணி
     


சுவாமி சன்னதி - பூஜை நேரங்கள்

  திருவனந்தல காலை 5.45 மணி
  விள பூஜை மற்றும் காலசாந்தி காலை 6.40 - 7.20 மணி
  திருக்குள சாந்தி மற்றும் உச்சிக்கால பூஜ காலை 10.40 - 11.20 மணி
சயரட்சை பூஜை மாலை 4.40 - 5.20 மணி
  அர்த்தஜாம பூஜை மாலை 7.40 - 8.20 மணி
     


திருக்கோயில் கட்டணம்
 

  உபய திருக்கல்யாணம் ரூ 1,501
  தங்கரதம் உலாவருதல் ரூ 1,501
  வைரக்கி¡£டம் சாத்துபடி செய்வதற்கு ரூ 2,001
உச்சிகால இலவச பிரசாதம் ரூ 5,000
  அன்னதானம் ரூ 20,000
  முக்குறுணி வினாயகர் கொலுக்கட்டை ரூ 10,000
  நித்ய ஒருகால பூஜை ரூ 10,000


தல வரலாறு

தமலயத்துவச பாண்டிய மன்னனுக்கு மூன்று தனங்களுடைய குழந்தையாக உமாதேவி பிறந்தாள். இக்குழந்தைக்கு கணவன் வரும்போது ஒரு தனம் மறையும் என்று ஆசாரி கேட்டது. பின்பு தடாதகை சிறப்பாக ஆட்சி செய்தாள்.மணப்பருவத்தை அடைந்த காலத்தில் நால்வகை படைகளுடன் புறப்பட்டு சென்று பல ராஜ்ஜியங்களையும் வென்றாள். இறுதியில் திருக்கைலாயதை அடைந்து சிவபெருமானையும் கண்டாள். அவரை கண்டவுடன் மூன்று தலங்கலில் ஒன்று மறைந்தது. இதையடுத்து தன் கனவன் சிவபெருமான் தான் என்பதை தடாதகை கண்டுகொண்டாள். பின்பு திருமால், பிரம்மா புடை சூழ சிவபெருமானாகிய சொக்கருக்கும் தடாதகையம்பாலாகிய மீனாட்சிக்கும் திருமணம் சிறப்புற நடந்தது. இறைவனும் மதுரையம்பதியை ஆளும் அன்னை மீனாட்சியாக இருக்க அருள் பு¡¢ந்தார். சிவபெருமானின் ஏராளமான திருவிளையாடல்கள் நிகழ்ந்த புண்ணியம் வாய்ந்த தலம் இது.

தல பெருமைகள்

1.உலக புகழ் பெற்ற சிவாலயம். பாண்டிய மன்னனாக அங்கையற்கண்ணியாம் அன்னை மீனாட்சி அம்பிகை பிறந்து நல்லாட்சி செய்யும் பதி.சிவபெருமாள் 64 திருவிளையாடல்கள் நிகழ்த்திய தலம். கால் மாரி ஆடிய தலமும் இதுவே. சிவனே எல்லாம் வல்ல சித்தராக எழுந்தருளிருக்கும் அதி அற்புத தலம்.

2.தென்னாடுடைய சிவனே போற்றி என சிவபக்தர்களால் மனமுருககூறும் சுலோகம் அமைய காரணமான சிவதலம்.
 
3.சிவபெருமானே சித்தராக வந்து அருள்பு¡¢யும் எல்லா வல்ல சித்தர் இத்தலத்தில் தான் இருக்கிறார்.

4.மூர்த்தி நாயனார் விபூதி ருத்ராட்சம் சடாமுடி மூன்றையும் துணையாக கொண்டு மும்மையால் உலகாண்ட நகரம்.

5.தேவாரபாடல் பெற்ற பாண்டி நாட்டுத் தலங்களில் முதலாவதான தலம் என்ற சிறப்புக்குறியது.

6. இந்திரன் வருணன் ஆகியோர் வழிபட்டு பேறுபெற்ற தலம்.

7.இது சிவதலம் என்றாலும் கூட 64 சக்தி பீடங்களுள் மீனாட்சி பீடம் முதல் பீடத்தைப் பெற்றுள்ளதால் எல்லா பூஜைகளும் அன்னை மீனட்சிக்கு முடிந்தபின்பே சிவபெருமானுக்கு நடைபெருகின்றன.

8.ஈசனே புலவராக வந்து தமிழை ஆராய்ந்த இடம்.

9.நெற்றிகண் திறப்பினினும் குற்றம் குற்ற்மே என்று வாதிட்ட தலம்.

10.சிவபெருமான் 64 திருவிளையாடல்களை நடத்தி காட்டிய தலம்.